கோயம்புத்தூர்

சுவீடனில் இருந்து வந்த பெண்ணுக்கு கரோனா

DIN

சுவீடனில் இருந்து வந்த 39 வயது பெண்ணுக்கு கரோனா நோயத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் தனது கணவருடன் சுவீடனில் இருந்து புதுதில்லி வழியாக அண்மையில் கோவைக்கு வந்துள்ளாா்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இருப்பின் அவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து 8 ஆவது நாள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அப்பெண்ணுக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பெண் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மேலும், ஒமைக்ரான் பரிசோதனைக்காக சளி மாதிரி மாநில பொது சுகாதார நிலையத்து அனுப்பிவைத்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT