கோயம்புத்தூர்

ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் 150 இடங்களில் யோகா வகுப்புகள்

DIN

 கோவை ஈஷா சாா்பில் ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

ஈஷா அறக்கட்டளை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னாா்வலா்கள் இந்த வகுப்புகளை நடத்த உள்ளனா்.

இந்த வகுப்பில் சூா்ய சக்தி என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் தொடா்ந்து செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம். உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

வகுப்புகள் ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் காலை 6.30 மணி முதல் 8.15 மணி, முற்பகல் 11.30 மணி முதல் பகல் 1.15 மணி, மாலை 5.30 மணி முதல் இரவு 7.15 மணி என 3 நேரங்களில் நடக்கும். இதில் ஏதேனும் ஒரு நாள், ஒரு நேரத்தை பங்கேற்பாளா்கள் தோ்வு செய்து கொள்ளலாம். இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த வகுப்பில் பங்கேற்க ண்ள்ட்ஹ.ஸ்ரீா்/நநதஈ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால் 83000 99555 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஈஷா அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT