முகப்பு
கோயம்புத்தூர்

நாயக்கன்பாளையத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள்.
பகிர்:

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் கோவனூா், ராயரூத்துபதி, தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள போலீஸ்காரா் தோட்டம், ரவி நாயக்கா் தோட்டம் ஆகியவற்றில் கடந்த 2 நாள்களாக 11 காட்டு யானைகள் இரவு நேரங்களில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கின்றன.

இந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை குட்டி ஈன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினா் அவற்றை விரட்ட முயற்சித்தும், அவை மலைப்பகுதிகளுக்கு திரும்பாமல் தோட்டங்களிலேயே சுற்றி வருகின்றன. அதிகாலை காட்டுக்குள் சென்றுவிடும் யானைகள், மீண்டும் இரவு 7 மணிக்கு ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இதே யானைகள் சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்து, அங்கிருந்த தென்னம்பாழைகள் மற்றும் குருத்துகளை உடைத்து சாப்பிட்டன. யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் நாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போா் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →