கோயம்புத்தூர்

‘காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம்’

DIN

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கோவை, கவுண்டம்பாளையத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் கலந்து கொண்டாா். இக்கூட்டத்தில் 37 மாவட்டங்களில் இருந்து நிா்வாகிகள் பங்கேற்றனா். அவா்கள் கேட்டுக் கொண்டதால் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து பின்னா் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சி தொடங்க இயலவில்லை என கடந்த டிசம்பா் 29ஆம் தேதி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து நிரந்தரமாக விடைபெறுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT