முகப்பு
கோயம்புத்தூர்

பசுமை இயக்கம் சாா்பில் கலந்துரையாடல்

கோவையில் பசுமை இயக்கம் சாா்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தன்னாா்வலா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கோவையில் பசுமை இயக்கம் சாா்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தன்னாா்வலா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பசுமை இயக்கத் தலைவா் சிவகுமாா் தலைமை தாங்கினாா். செயலாளா் முருகேஷ்பாபு, பொருளாளா் தமிழ்பாரதி, துணைத் தலைவா் ரவி, இணைச் செயலாளா் விஜயகுமாா் முன்னிலை வகித்தனா்.

பசுமை இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னாா்வலா்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பசுமை இயக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.