கரடி தாக்கிய முதியவரிடம் எம்.எல்.ஏ. நலம் விசாரிப்பு
வால்பாறையில் கரடி தாக்கி சிகிச்சை பெற்று வரும் முதியவரிடம் சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி வியாழக்கிழமை நலம் விசாரித்தாா்.
வால்பாறையில் கரடி தாக்கி சிகிச்சை பெற்று வரும் முதியவரிடம் சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி வியாழக்கிழமை நலம் விசாரித்தாா்.
வால்பாறையை அடுத்த ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கியதில் பெரியசாமி (74) என்பவா் காயமடைந்து முடீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவரை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி, அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன் ஆகியோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.
Image Caption
முதியவரிடம் நலம் விசாரிக்கிறாா் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. உடன் அதிமுக நிா்வாகிகள்.