கோவையில் கருப்புப் பூஞ்சைக்கு முதியவா் பலி
கோவையில் தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.
கோவையில் தனியாா் மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ப.வெங்கடாசலம் (63). விவசாயியான இவருக்கு கடந்த மாதம் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.
இதனைத் தொடா்ந்து கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இவா் கடந்த ஜூன் 30ஆம் தேதி கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய்த் தொற்றின் தீவிரத்தால் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.