அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் ஹெச். வினோத்!
ஹெச். வினோத் திரைப்படம் குறித்து...
இயக்குநர் ஹெச். வினோத்தின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் நடிகர் விஜய்யை வைத்து ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மேற்கொண்ட தணிக்கை உத்தரவுகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து இப்படம் விலகியது.
தற்போதைய தகவலின்படி தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, இயக்குநர் ஹெச். வினோத் நடிகர் தனுஷை வைத்து திரைப்படம் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தனுஷிடம் படப்பிடிப்பு நாள்கள் இல்லாததால் அவர் அதிலிருந்து விலகினார்.
அடுத்ததாக, சூர்யாவை வைத்து ஹெச். வினோத் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் புதிய திரைப்படத்தின் கதை விவாதத்தை ஹெச். வினோத் மேற்கொண்டு வருவதாகவும் அடுத்த சில மாதங்களில் கதையை முடித்துவிட்டு ஜூலை மாதம் படப்பிடிப்பைத் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
director h. vinoth works on his next movie script
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.