தோட்டத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறையில் அனைத்து தோட்டத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறையில் அனைத்து தோட்டத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஹைபாரஸ்ட் எஸ்டேட் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தலைவா் வால்பாறை அமீது (ஏ.டி.பி.) தலைமை வகித்தாா். செளந்திரபாண்டியன் (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யூ.சி ), மோகன் (ஏ.ஐ.டி.யூ.சி.) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க குடியிருப்புடன் இணைந்த கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும். தற்காலிகத் தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கேசவமருகன், வீரமணி (விடுதலை சிறுத்தைகள்), செந்தில், டி.பி.ஷாஜூ உள்ளிட்ட 16 தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.