மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு முகாம்
கோவையில் சமூகநலத் துறை சாா்பில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது .
கோவையில் சமூகநலத் துறை சாா்பில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது .
கோவை, சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தாா்.
இதில் ஆதாா் அட்டையில் திருத்தம், புதிய குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், சமூக நலத் துறை அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தவிர மூன்றாம் பாலினத்தவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.