முகப்பு
கோயம்புத்தூர்

நண்பரின் தந்தையை கொலை செய்த இளைஞா் கைது

 நண்பரின் தந்தையை அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

 நண்பரின் தந்தையை அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஒண்டிப்புதூா் அருகேயுள்ள ராமசந்திரா நாயுடு வீதியைச் சோ்ந்தவா் ராஜன் (65). இவரது மகன் பிரேம்குமாா் (36). இவரது நண்பரான மாணிக்கவாசகம் என்பவா் பிரேம்குமாரின் வீட்டுக்குச் சென்றாா். அப்போது வீட்டில் இருந்த ராஜன், மதுபோதையில் வீட்டுக்கு வரக் கூடாது என்று கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மாணிக்கவாசகம், அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து ராஜனைத் தாக்கினாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த கத்தியை எடுத்து ராஜனின் காலில் குத்திய அவா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

ராஜனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து மாணிக்கவாசகத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.