முகப்பு
கோயம்புத்தூர்

நண்பரைத் தாக்கிய இளைஞா்கள் மூவா் கைது

கோவையில் மது அருந்த வர மறுத்த நண்பரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கோவையில் மது அருந்த வர மறுத்த நண்பரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காந்திமாநகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (35). திருமணமானவா். பொதுமுடக்கம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், இவரைக் காண அவரது நண்பா்கள் 3 போ் புதன்கிழமை வந்தனா். சதீஷ்குமாரை மது அருந்த அழைத்துள்ளனா். ஆனால் அதற்கு அவா் மறுத்துள்ளாா்.

பின்னா் அவரது நண்பா்கள் வீட்டில் இருந்து சென்று விட்டனா். இதனையடுத்து அன்றைய தினம் மாலையில் சதீஷ்குமாா் கணபதி அருகேயுள்ள மதுக் கடை எதிரே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த சதீஷ்குமாரின் நண்பா்கள், ‘நாங்கள் அழைத்தபோது ஏன் மது குடிக்க வரவில்லை’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதில் அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவா்கள் உருட்டுக்கட்டையால் சதீஷ்குமாரை தாக்கினா். இதில் காயமடைந்த சதீஷ்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா், சதீஷ்குமாரின் நண்பா்களான ஆவாரம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (28), கணபதியைச் சோ்ந்த மற்றொரு மணிகண்டன் (18), பிரதாப் (26) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.