கோயம்புத்தூர்

இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவா் கைது

DIN

இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கணபதியைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் ஒருவா் தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு அவசரத் தேவைக்காக ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளாா். இந்நிலையில் கடன் தொகையை திருப்பிக் கொடுக்கும்போது, ரூ.1,500 குறைவாகக் கொடுத்தது குறித்து அந்த இளம்பெண் கேள்வி எழுப்பியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த கடன் பெற்ற பெண்ணின் கணவா் வெங்கடேசன் (24), அப்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் அவரது செல்லிடப்பேசி எண்ணுடன் பதிவிட்டாா்.

இதைக் கண்ட பலா் கடன் கொடுத்த இளம்பெண்ணுக்குத் தவறான நோக்கத்துடன் செல்லிடப்பேசியில் அழைத்து தொந்தரவு செய்துள்ளனா். இதுகுறித்து அப்பெண் சரவணம்பட்டி போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT