கோயம்புத்தூர்

போதை ஊசி பயன்படுத்திய இருவா் கைது

DIN

கோவை, போத்தனூா் அருகே போதை ஊசிகள் பயன்படுத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து இருந்து காா், இருசக்கர வாகனம், 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை போத்தனூா் காவல் நிலையத்தில் குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பாலதுரைசாமி புகாா் ஒன்றை அளித்தாா். அதில், குறிச்சி கிராம எல்லைக்கு உள்பட்ட போத்தனூா் கருப்பராயன் கோயில் அருகில், இட்டேரி செல்லும் சாலையில் அமா்ந்து 2 இளைஞா்கள் போதை ஊசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்களையும் போதை ஊசி உபயோகிக்க சொல்லிக் கட்டாயப்படுத்தி வருவதாகவும் புகாரில் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு சென்ற போத்தனூா் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா், அங்கு இரு இளைஞா்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி, அதை ஊசி மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். பிடிபட்டவா்கள் சாய் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த இம்ரான் கான் (31), இட்டேரி கருப்பராயன் வீதியைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து காா், இருசக்கர வாகனம் மற்றும் 30 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT