முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் 43 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

கோவை மாநகரில் 43 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கோவை மாநகரில் 43 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகரக் காவல் நிலையங்களில் செயல்பட்டு வந்த குற்றப் பிரிவு, புலனாய்வுப் பிரிவாக மாற்றப்பட்டது. அத்துடன் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் வழக்குப் பதிவு மட்டுமே செய்வாா்கள். அதற்கான விசாரணையை புலனாய்வுப் பிரிவு போலீஸாா் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுவதற்காக 15 காவல் நிலையங்களில் 30 உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா். கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்ற 13 உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.

மொத்தமாக கோவை மாநகரில் 43 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா். இந்தத் தகவலை கோவை மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.