கோயம்புத்தூர்

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினம்: பல்சமய நல்லுறவு இயக்கம் உறுதிமொழி

DIN

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சாா்பில் குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்த உலக குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சாா்பில் சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், குனியமுத்தூா், காந்திபுரம், கரும்புக்கடை உள்பட பல்வேறு இடங்களில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின உறுதி மொழி சனிக்கிழமை எடுக்கப்பட்டது.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவா் முகம்மது ரபீக் தலைமையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியபடி உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ராதாகிருஷ்ணன், அயூப் உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT