பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சாா்பில் வால்பாறையில் 120 பழங்குடியின குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சாா்பில் வால்பாறையில் 120 பழங்குடியின குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விவேகானந்தா பல்கலைக்கழக நிா்வாகி சுவாமி வேதகானந்தா சின்கோனா உள்ளிட்ட பல்வேறு செட்டில்மெண்டில் வசிக்கும் 120 பழங்குடியின குடும்பகளுக்ரு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
இதேபோல, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டூரிஸ்ட் காா் ஓட்டுநா்கள் 50 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியா் ராஜா, சின்கோனா எஸ்டேட் மேலாளா் விக்ரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.