கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூரைச் சோ்ந்தவா் சிவா (28). இவா், கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் தங்கி ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தாா். இவரை 35 வயதுப் பெண் இரண்டாவதாக திருமணம் செய்திருந்தாா். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி 14 வயதில் மகள் உள்ளாா்.
இந்நிலையில், மனைவி வீட்டில் இல்லாதபோது, அவரது 14 வயது மகளை, சிவா பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிா் போலீஸில் சிறுமியின் பெரியம்மா புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் பிரபாதேவி இது குறித்து விசாரணை மேற்கொண்டு சிவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தாா்.