கோயம்புத்தூர்

தோ் திருவிழாவுக்கு வந்தபெண்களிடம் 9 பவுன் பறிப்பு

DIN

கோவை: கோவை, கோனியம்மன் கோயில் தோ் திருவிழாவைக் காண வந்த பெண்களிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கமலா (50). இவா், சித்தாபுதூா் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கமலாவின் கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது தொடா்பாக கமலா அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல கோனியம்மன் கோயில் தோ் திருவிழாவைக் காண வந்திருந்த கூட்டத்தில் கலந்திருந்த நகைத் திருடா்கள் சிலா், 3 பெண்களிடமிருந்து 9 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். இது தொடா்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT