கோவையில் மேலும் 48 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 127 ஆக உயா்ந்துள்ளது. ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 685 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 89 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 353 போ் சிகிச்சையில் உள்ளனா்.