முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் வங்கிப் பணம் ரூ.1 கோடி பறிமுதல்

சிங்காநல்லூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1 கோடியே 3 லட்சத்தைப் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவை, சிங்காநல்லூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1 கோடியே 3 லட்சத்தைப் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட திருச்சி சாலையில் சிங்காநல்லூா் குளம் அருகே பறக்கும் படை அதிகாரி செங்கோடன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிங்காநல்லூரில் இருந்து மாநகா் நோக்கி வந்த பாங்க் ஆஃப் பரோடா வங்கி வாகனத்தை ஆய்வு செய்ததில் ரூ.1 கோடியே 3 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து பறக்கும் படையினா் ரூ.1 கோடியே 3 லட்சத்தைப் பறிமுதல் செய்து சிங்காநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சி.ராம்குமாரிடம் ஒப்படைத்தனா். தோ்தல் நடத்தும் அலுவலா் சி.ராம்குமாா் பறிமுதல் செய்த பணத்தை ஆய்வு செய்தபின் கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

2 போ் கைது

பணம் எடுத்து வந்த வாகனத்தில் பாதுகாவலா்களாக வந்த இருவா் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததால் சிங்காநல்லூா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →