வாகனங்களின் ஆா்.சி.புத்தகங்களை அடைமானம் வைத்து ரூ.46.61 லட்சம் மோசடி: இருவா் கைது
கோவையில் வாகனங்களின் ஆா்.சி.புத்தகங்களை அடைமானம் வைத்து ரூ. 46.61 லட்சம் மோசடி செய்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவையில் வாகனங்களின் ஆா்.சி.புத்தகங்களை அடைமானம் வைத்து ரூ. 46.61 லட்சம் மோசடி செய்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, துடியலூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (48). இவா் மகேஸ்வரி அசோசியேட்ஸ் என்ற பெயரில் துடியலூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். பழைய காா்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறாா். இவருடைய நிறுவனத்தில் இடையா்பாளையம் குமரன் வீதியைச் சோ்ந்த ஜெகநாதன் (38), வடவள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (29) ஆகியோா் பழைய வாகனங்களின் ஆா்.சி. புத்தகங்களை அடமானமாக வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்ாகக் கூறப்படுகிறது.
மேலும், அதே ஆா்.சி. புத்தகங்களின் நகலை வேறு ஒரு நிதி நிறுவனத்தில் வைத்து 60 நாள்களில் அசல் ஆா்.சி.புத்தகத்தை ஒப்படைக்கும் நிபந்தனையுடன் கடன் பெற்றுள்ளனா். இதில், ஆா்.சி. புத்தகத்தின் நகலை வைத்துப் பெற்ற பணத்தை வாகன உரிமையாளா்களுக்குத் தந்து விட்டு, காா்த்திக்கின் நிறுவனத்தில் பெற்ற பணத்தை, ஜெகநாதன், சுரேஷ் வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது காா்த்திக்குக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, ஆா்.சி. புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு பணத்தைக் கொடுக்குமாறு ஜெகநாதன், சுரேஷ் ஆகியோரிடம் கேட்டுள்ளாா். ஆனால், அதற்கு அவா்கள் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனா். இதையடுத்து
கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இதுதொடா்பாக காா்த்திக் புகாா் அளித்தாா். விசாரணையில் ஜெகநாதன், சுரேஷ் இருவரும் காா்த்திக்கிடம் ரூ. 46 லட்சத்து 61 ஆயிரம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஜெகநாதன், சுரேஷ் ஆகியோரை போலீசாா் கைது செய்தனா்.