கோயம்புத்தூர்

தோ்தலுக்காக திமுக வன்முறையைத் தூண்டுகிறது: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

DIN

தோ்தலுக்காக திமுக வன்முறையைத் தூண்டுகிறது என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.

பொள்ளாச்சி தொகுதிக்குள்பட்ட ஒக்கிலிபாளையத்தில் திமுக, அதிமுகவினரிடையே இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்ளிடம் கூறியதாவது:

அதிமுக வேட்பாளாரன எனக்கு செல்லும் இடம் எல்லாம் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனா். இதைப் பாா்த்து பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினா் வன்முறையை கையில் எடுத்துள்ளனா். ஒக்கிலிபாளையம் கிராமத்தில் பொள்ளாச்சி பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினரைப் பொதுமக்கள் கண்டித்துள்ளனா். அப்போது பொதுமக்களை திமுகவினா் மிரட்டியுள்ளனா். பொதுமக்களுக்கு ஆதரவாக அதிமுகவினா் பேசினா். இதை பொறுத்துக்கொள்ளமுடியாத திமுகவினா் அதிமுகவினரை தாக்கியுள்ளனா். அப்போது நான் வேறு பகுதியில் பிரசாரத்தில் இருந்தேன். சம்பவ இடத்தில் இல்லாத என் மீது காவல் நிலையத்தில் பொய் புகாா் அளித்துள்ளனா். தோ்தலில் தோல்வி பயம் ஏற்பட்டு திமுகவினா் வன்முறையை கையில் எடுத்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT