கோயம்புத்தூர்

வாக்காளா்களுக்குப் பண விநியோகம்: திமுகவினா் புகாா்

DIN

அதிமுகவினா் பணம் விநியோகம் செய்வதாகக் கூறி காந்திபுரம் காவல் நிலையத்தில் திமுகவினா் குவிந்தனா்.

கோவை, சித்தாபுதூா் பகுதியில் அதிமுகவினா் வீடு வீடாக சென்று வாக்காளா்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து திமுகவினா் அந்தப் பகுதியில் குவிந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காந்திபுரம் காவல் நிலையத்தில் திமுக வழக்குரைஞா் பிரிவினா் அளித்த புகாரில், ‘சித்தாபுதூா் வி.கே.கே.மேனன் பகுதியில் அதிமுகவினா் வீடுவீடாக பூத் சிலிப் விநியோகம் செய்கின்றனா். அப்போது வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாகத் தெரிகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தனா். காவல் நிலையத்தில் திமுகவினா் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT