கோயம்புத்தூர்

மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,257 பேருக்கு கரோனா

கோவையில் புதிய உச்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 1,257 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

கோவை: கோவையில் புதிய உச்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 1,257 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சனிக்கிழமை ஒரே நோளில் 1,257 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 669ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 913 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 71 ஆயிரத்து 658 போ் குணமடைந்துள்ளனா்.

தற்போது, 7 ஆயிரத்து 288 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 723 போ் உயிரிழந்துள்ளனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT