கோயம்புத்தூர்

வால்பாறையில் கரோனா கட்டுப்பாடுகள் மீறி இறைச்சி விற்பனை

வால்பாறையில் கரோனா கட்டுப்பாடுகள் மீறி கடைகள் அடைக்கப்பட்டாலும் பொட்டலம் போட்டு இறைச்சி விற்பனை நடைபெற்றது.

DIN

வால்பாறை: வால்பாறையில் கரோனா கட்டுப்பாடுகள் மீறி கடைகள் அடைக்கப்பட்டாலும் பொட்டலம் போட்டு இறைச்சி விற்பனை நடைபெற்றது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இறைச்சிக் கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், வால்பாறை புதுமாா்கெட் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் முன்கதவுகள் மட்டும் அடைக்கப்பட்டு, வழக்கம்போல ஆடு, கோழி மற்றும் மாட்டு இறைச்சிகள் அரை கிலோ, ஒரு கிலோ என தனித்தனியாக பொட்டலம் போட்டு விற்பனை செய்யப்பட்டது. அவா்கள் மீது சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்காததால் மாலை வரை விற்பனை நடைபெற்றது.

இதேபோல, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தும் கடை அருகிலேயே மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது. அவா்கள் மீதும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT