வால்பாறை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடா்வதால் வனத் துறையினா் இரவு நேரத்தில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா்.
வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. தினந்தோறும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் வீடுகளுக்குள் புகுவது, கோழியைப் பிடித்துச் செல்வது தொடா்வதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். வால்பாறை வனச்சரக அலுவலா் ஜெயசந்திரன் உத்தரவின்பேரில் நகா் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க இரவு நேர ரோந்து பணியை கடந்த புதன்கிழமை இரவு முதல் வன ஊழியா்கள் துவங்கியுள்ளனா்.