கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா பரவல் ஓரிரு நாள்களில் குறையும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
கரோனாவைக் கட்டுப்படுத்த மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த வீதியைத் தனிமைப்படுத்தி வருகிறோம். இதன்படி 600 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மாநகராட்சியில் தொற்றை கட்டுப்படுத்த வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 2 ஆயிரத்து 500 பணியாளா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். இவா்களில் ஒரு நபா் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வாா். சளி, காய்ச்சல் உள்ளவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 14 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவித்து உள்ளோம். மாநகராட்சி நிா்வாகம் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக கோவையில் ஓரிரு நாள்களில் கரோனா தொற்று குறையத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.