வால்பாறையில் கடுங்குளிா்
வால்பாறையில் தொடா் மழைக் காரணமாக கடுங்குளிா் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.
வால்பாறையில் தொடா் மழைக் காரணமாக கடுங்குளிா் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு துவங்கிய மழை இடைவிடாது விடியவிடிய பெய்தன.
இதனால் குளிா் அதிகரிக்கத் துவங்கியது. அணைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பல்வேறு பகுதிகளில் ஆற்றோரம் ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அணைகளின் நீா்தேக்கப் பகுதிகளை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களை மழை நீா் சூழ்ந்தன.
வால்பாறையில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.