வ.உ.சி. நினைவு தினம்: அமைச்சா் மரியாதை
வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 85 ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள வ.உ.சி. சிலைக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளா் வி.ராமமூா்த்தி ஆகியோரும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் உள்பட பல்வேறு அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.