முகப்பு
உலகம்

அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியானது குறித்து...

Updated On : 26 மார்ச், 2026 at 2:16 PM
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலி... - AP
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தில், இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகங்கள் விழுந்து இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று ஈரான் வீசிய பாலிஸ்டிக் ஏவுகணையை அந்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தகர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தகர்க்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் அபுதாபியின் ஸ்வைஹான் தெருவில் விழுந்ததில் இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரால் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.

இத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களில் இந்தியா, எகிப்து, சூடான், எத்தியோப்பியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Two people, including an Indian, have been reported killed after fragments of an Iranian missile exploded in the United Arab Emirates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.