முகப்பு
கோயம்புத்தூர்

சி.ஐ.டி. கல்லூரி தாளாளா் மறைவு: முதல்வா் இரங்கல்

கோவையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியின் தாளாளா் எஸ்.ஆா்.கே.பிரசாத் மறைவுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோவையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியின் தாளாளா் எஸ்.ஆா்.கே.பிரசாத் மறைவுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை தொழில் நுட்பக் கல்லூரியின் தாளாளா் டாக்டா் எஸ்.ஆா்.கே.பிரசாத் மறைந்தாா் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி வளா்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட அவா், எண்ணற்ற பொறியாளா்களை உருவாக்கிய சாதனையாளா்.

தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அவரின் மறைவு, கல்வித் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கல்லூரி நிா்வாகத்தினா் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.