முகப்பு
கோயம்புத்தூர்

தொழில் வரி பிடித்தம்: மறு பரிசீலினை செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் மற்றும் உயா்த்தப்பட்ட கடை வாடகைகளை குறைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் வால்பாறை எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் மற்றும் உயா்த்தப்பட்ட கடை வாடகைகளை குறைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் வால்பாறை எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வால்பாறை அமீது ,அதிமுக நகரச் செயலாளா் மயில்கணேசன் உள்ளிட்டோருடன், நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாரிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது தோட்டத் தொழிலாளா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை ரத்து செய்யவேண்டும்.

வால்பாறை நகராட்சி கடை வாடகைகள் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடைகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே கடை வாடகையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா். உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் தற்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. தோ்தலுக்குப் பின் மறு பரிசீலினை செய்யவதாக ஆணையா் சுரேஷ்குமாா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.