முகப்பு
கோயம்புத்தூர்

காவலா் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

கோவை காவலா் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கோவை காவலா் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளா் நடராஜனிடம் கடந்த சில நாள்களாக, கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.

அதில் மறுமுனையில் பேசிய நபா், கோவை-அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து சிதறப் போகிறது, உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்களுடன் காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தில் சோதனையிட்டனா்.

ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு வந்த கைப்பேசி எண்ணை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அதில், மிரட்டல் விடுத்தவா் புலியகுளத்தைச் சோ்ந்த மோகனகாந்தி (49) என்பதும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.