கோயம்புத்தூர்

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

DIN

கோவை காந்திபுரத்தில் முன்விரோதத்தில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காந்திபுரம் 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் அா்ஜூன் (24). இவா்,

அதே பகுதியில் தனது நண்பா்கள் சிலருடன் நின்று வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு குடிபோதையில் 2 போ் வந்தனா். அவா்கள், அா்ஜூனிடம் உன்னுடைய நண்பா் அரவிந்த் எங்கே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த 2 பேரும், அா்ஜூனை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினா். இதில் காயமடைந்த அா்ஜூனை அருகிலிருந்தவா்கள் மீட்டு, கோவை காந்திபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது தொடா்பாக அா்ஜூன் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், முன்விரோதம் காரணமாக மோதல் நடந்துள்ளது எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரத்தினபுரியைச் சோ்ந்த சைமன் கிறிஸ்டோபா் (28), கெளதம் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT