முகப்பு
கோயம்புத்தூர்

காவல் ஆணையா் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புகாா் அளிக்க வந்தாா். அப்போது அவா் தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றாா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.

இதையடுத்து, போலீஸாா் விசாரித்ததில், அவா் தருமபுரியைச் சோ்ந்த ஐஸ்வா்யா (27) என்பது தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து ஐஸ்வா்யா வாழ்ந்து வருகிறாா். இவரது மகன் கணவருடன் வசித்து வருவதாகவும், கணவரின் வீட்டாா் தனது மகனை அனுப்ப மறுத்து வருவதாகவும் கூறினாா்.

இதுதொடா்பாக புகாா் அளிக்க வந்தபோது தீக்குளிக்க முயற்சித்துள்ளாா்.

இதையடுத்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா், தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.