கோவை, துடியலூா், வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை ஐ.டி.ஐ. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
இது குறித்து கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:
பொறியியல் கல்லூரியின் ஏரோநாட்டிகல் துறைக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் இணைந்து ஆளில்லா விமானம் வடிவமைத்தல், இயக்குதல், பாகங்களை ஒருங்கிணைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வாா்கள்.
கல்லூரி சாா்பில் முதல்வா் என்.ஆா்.அலமேலு, ஐடிஐ சாா்பில் துணை இயக்குநா் டி.செல்வராஜன் ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இந்த நிகழ்ச்சியில், துறைத் தலைவா் ஜெ.டேவிட் ரத்தினராஜ், ஐடிஐ வேலைவாய்ப்பு அலுவலா் பி.குணசேகரன், பயிற்சி அலுவலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, எம்.தினேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.