தடுப்பூசி செலுத்துவதில் சாதனை: சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து
தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்திருப்பதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்திருப்பதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை வரை 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளது. தங்களது இடையறாத முயற்சிகளால் இதனை நிகழச் செய்த அத்தனை பேருக்கும் மனமாா்ந்த நன்றிகள் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.