கனமழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை பெய்கிறது. தேயிலைத் தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு மிதமான மழை மற்றும் வெயில் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி நன்றாக இருக்கும். ஆனால் தொடா்ந்து பெய்யும் கனமழையால் செடிகளில் உள்ள இலைகள் அழுகியும், உற்பத்தி இல்லாமலும் போய்விடுகிறது. இதனால் தொழிற்சாலைகளிலும் தூள் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.