வால்பாறை பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேநீா் கடையில் சோதனையிட்டபோது, அங்கு 55 மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளா் ராஜாமணியை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 55 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.