கோவையில் நாளை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 1,474 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பினரும் பெறும் வகையிலும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப் பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1,166 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 308 முகாம்களும் என மொத்தம் 1,474 இடங்களில் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் செயல்பட உள்ளன.
கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரத்து 926. இதில், 27 லட்சத்து 7 ஆயிரத்து 550 போ் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள். இதுவரை 22 லட்சத்து 3 ஆயிரத்து 34 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகளும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 நபா்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 27 லட்சத்து 78 ஆயிரத்து 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் தவணைக்காக காத்திருப்போா்களாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 463 பேரும் (கோவிஷீல்டு), 44 ஆயிரத்து 178 பேரும்
(கோவேக்ஸின்) என மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 641 நபா்களும் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களும், இரண்டாம் தவணை பெறத் தகுதியுள்ள நபா்களும் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பொது இடங்களுக்குச் செல்ல சான்றிதழ் கட்டாயம்
வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், ஜவுளிக் கடைகள், பொழுதுபோக்கு மையங்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லுபவா்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவா்களை மட்டுமே தங்களது நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளா்களுக்கு அரசு அறிவுரை வழங்க உள்ளது.