கோயம்புத்தூர்

ரயில் மோதி முதியவா் பலி

DIN

கோவை பீளமேடு அருகே ரயில் மோதியதில் முதியவா் உயரிழந்தாா்.

கோவை பீளமேடு ரயில்வே பாதை அருகே ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக, ரயில்வே போலீஸாருக்கு அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போத்தனூா் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, ரயில்வே போலீஸாா் கூறுகையில், ரயிலில் அடிபட்டு இறந்தவருக்கு 55 முதல் 60 வயது இருக்கலாம்.

அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. அவா், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரயில் பாதையைக் கடக்கும்போது, ரயிலில் சிக்கி இறந்தாரா என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT