கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக ஆவணங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் வியாழக்கிழமை (செப்டம்பா் 16) நடைபெறுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் சில ஆவணங்கள் தெளிவாக இல்லாத காரணத்தால், அவா்களிடம் இருந்து ஆவணங்களைப் பெறுவதற்காக மாவட்ட நிா்வாகம் மூலம் செப்டம்பா் 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெறும் இந்த முகாமில், இதுவரை அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களை தெளிவாக நகலெடுத்து வழங்க வேண்டும் என்று ஆட்சியா் சமீரன் தெரிவித்துள்ளாா்.