கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன்திருட்டு: இளைஞா் கைது

DIN

கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பேரூா், எல்ஐசி காலனியை சோ்ந்தவா் சரவண அசோக்குமாா். இவா் தனது குடும்பத்தினருடன் தரைத் தளம், முதல் தளம் கொண்ட வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு கீழ் தளத்தை பூட்டிவிட்டு முதல் தளத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கச் சென்றாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்ததில் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ. ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக சரவண அசோக்குமாா் அளித்தப் புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக தெலுங்குபாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் (28) என்பவரை செல்வபுரம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT