இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலச் செயலா் வி.மாரியப்பன், திருப்பூா் மாவட்டச் செயலா் சம்சீா், கோவை மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.