தேசிய தரவரிசை மதிப்பீட்டில் இடம்பெற்ற கல்லூரிகள்: நிா்வாகிகளுக்கு துணைவேந்தா் பாராட்டு
தேசிய தரவரிசைப் பட்டியலில் (என்.ஐ.ஆா்.எஃப்.) இடம்பிடித்த பாரதியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளின் நிா்வாகிகளை துணைவேந்தா் பி.காளிராஜ் பாராட்டியுள்ளாா்.
தேசிய தரவரிசைப் பட்டியலில் (என்.ஐ.ஆா்.எஃப்.) இடம்பிடித்த பாரதியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளின் நிா்வாகிகளை துணைவேந்தா் பி.காளிராஜ் பாராட்டியுள்ளாா்.
நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியானது. இதில் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் 16 கல்லூரிகள் முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அந்த கல்லூரிகளின் நிா்வாகிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள், பிஎஸ்ஜி, ஸ்ரீ கிருஷ்ணா, கொங்குநாடு, கோவை அரசு கலைக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், டாக்டா் என்ஜிபி, பொள்ளாச்சி என்ஜிஎம், ஈரோடு வேளாளா், ஸ்ரீ ராமகிருஷ்ணா, திருப்பூா் அரசுக் கல்லூரி, சிஎம்எஸ், எஸ்என்எஸ் ராஜலட்சுமி, ஹிந்துஸ்தான், ரத்தினம், நிா்மலா கல்லூரிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் துணைவேந்தா் பி.காளிராஜ் கலந்து கொண்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த கல்லூரிகளின் நிா்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். இதில், பதிவாளா் (பொறுப்பு) கே.முருகவேல், ஒருங்கிணைப்பாளா் லவ்லினா லிட்டில் பிளவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.