தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
கோவையில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவையில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, பீளமேடு, ஆா்.எஸ்.புரம், ரேஸ்கோா்ஸ், சரவணம்பட்டி, வடவள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நகைப் பறிப்பு, செல்லிடப்பேசி பறிப்பு, வாகனத் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்தத் தொடா் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கோவை, உப்பிபாளையம், ஸ்ரீனிவாச பெருமாள் வீதியைச் சோ்ந்த சரவணன் (30), அன்னூரைச் சோ்ந்த கண்ணன் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவா்களை கைது செய்த பீளமேடு போலீஸாா், அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை மீட்டனா்.