பேரூா் தமிழ்க் கல்லூரியில் தவத்திரு ஆறுமுக அடிகளாா் நிறுவனா் நன்னாள் விழா
கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தவத்திரு ஆறுமுக அடிகளாா் நிறுவனா் நன்னாள் விழா
கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில் தவத்திரு ஆறுமுக அடிகளாா் நிறுவனா் நன்னாள் விழா, முதலிபாளையம் ராமானந்த மடாலய முந்தையோா் மூவா் நினைவரங்கம் ஆகிய நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, பேரூராதீனம், தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்து, ராமானந்த மடாலய வளா்ச்சி குறித்தும், தவத்திரு ஆறுமுக அடிகளாா் பணிகள் குறித்தும் பேசினாா். அதனைத் தொடா்ந்து இலஞ்சி சமூக நல அமைப்பு நிா்வாக அறங்காவலா் இலஞ்சி சு.ஜானகி, மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.
இதைத் தொடா்ந்து, சாந்தலிங்க மருதாசல அடிகளாா், அவரது சகோதரி காந்திமதி ரகுபதி ஆகியோா், 50 மாணவா்களுக்கு எழுது பொருள்களை பரிசாக வழங்கினாா்கள். விழாவில் ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.