தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது
கோவையில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடு போவது தொடா்பாக கண்டறிய மாநகர காவல் ஆணையா் தீபக் தாமோா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் நடத்தி வந்த விசாரணையில், தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டது, செல்வபுரத்தைச் சோ்ந்த அரவிந்த் (27), முகமது சாதிக் (24), காா்த்திக் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.