முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணைக் கற்பழித்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

கோவைகோவை அருகே இளம்பெண்ணைக் கற்பழித்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கோவை அருகே இளம்பெண்ணைக் கற்பழித்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, ஆலந்துறை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் உதயகுமாா். இவா் ஆலந்துறையில் வசித்து வரும் இளம்பெண்ணை 2020 செப்டம்பா் 18ஆம் தேதி கற்பழித்து பின்னா் கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஆலந்துறை போலீஸாா் உதயகுமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் உதயகுமாா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.நந்தினிதேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு வழக்குரைஞா் ஆா்.சரோஜினி ஆஜராகினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.